• Fri. Mar 29th, 2024

அஸ்வின் விவகாரத்தில் தினேஷ் கார்த்திக்தான் பெரிய குற்றவாளி; சேவாக் சாடல்

Oct 1, 2021

ரிஷப் பந்த் உடலில் பட்டு சென்ற பந்துக்கு ஒரு ரன்னை அஸ்வின் அழைத்து இருவரும் ஓடிய விவகாரம் பூதாகாரம் அடைந்த விவகாரத்தில் தினேஷ் கார்த்திக்தான் பெரிய குற்றவாளி என விரேந்திர சேவாக் கடுமையாகச் சாடியுள்ளார்.

கொல்கத்தா, டெல்லி கேப்பிடல்ஸ் ஆட்டத்தில் இந்த விவகாரம் பூதாகாரமாக அஸ்வினை எல்லாரும் சாட, அஸ்வினுக்கு ஆதரவாக சேவாக், கம்பீர் போன்றோர் கருத்துகளை வெளியிட அஸ்வின் தன் பங்குக்கு தன் செயலில் தவறில்லை, மோர்கன் தாங்கள்தான் தார்மீகத்தில் உயர்ந்தவர்கள் என்று பிறரை தரக்குறைவாக பேச உரிமையில்லை என்றும் தன் சமூகவலைத் தளப்பக்கத்தில் விளக்கம் அளித்தார்.

இந்த விவகாரம் எ பூதாகாரமாக ஆனதே தினேஷ் கார்த்திக் செய்த வம்பு வேலைதான் என்று சேவாக் கூறியுள்ளார்.

“இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் தினேஷ் கார்த்திக்தான் பெரிய குற்றவாளி என்று நான் கருதுகிறேன். மோர்கன் இது பற்றி என்ன கூறினார் என்பதை தினேஷ் கார்த்திக் ரொம்ப முக்கியம் என்று கருதி வெளிப்படுத்தினார்.

கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம் என்று தினேஷ் கார்த்திக் கூறியிருந்தால் அது அதோடு முடிந்திருக்கும்.

பிறகு எதற்கு இவர் அதைக்கூறினார், இவர் அதைக்கூறினார் என்றெல்லாம் வரப்போகிறது” என்று விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இந்நிலையில் , மைதானத்தில் நடப்பது அங்கேயோடு முடியவேண்டும், மீடியாக்காரர்களுக்கு தீனி போடுவது விளையாடும் வீரர்களின் வேலை அல்ல என்பதுதான் சேவாக் கருத்தின் சூட்சமம் என பலரும் கூறிவருகின்றனர்.