• Fri. Jul 26th, 2024

எல்லாம் போதும்; இங்கிலாந்து தொடருடன் விடைபெறவுள்ள ஐந்து இந்திய வீரர்கள்!

Aug 2, 2021

டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கபட்டது.

ஆனால், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி மிக மோசமான தோல்வியை தழுவியதால், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு ஒருசில சீனியர் வீரர்கள், இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ள ஐந்து வீரர்கள் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, இங்கிலாந்து தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

அவரது பந்துவீச்சு தற்பொழுது வரை குறை சொல்ல முடியாத அளவிற்கே இருந்தாலும், வயதை கருத்தில் கொண்டும், இளம் வீரர்களை கருத்தில் கொண்டும் இஷாந்த் சர்மா ஓய்வை அறிவிப்பதே சிறந்ததாக பார்க்கப்படுகிறது.