• Sun. Sep 8th, 2024

ஐசிசி மகளிர் கிரிக்கெட் சுற்று கைவிடப்பட்டது!

Nov 27, 2021

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண தகுதிச் சுற்று, கொரோனா அபாயம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இறுதி மூன்று இடங்களையும், ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் மீதமுள்ள இரண்டு இடங்களையும் தீர்மானிப்பதற்காகவே தகுதிச் சுற்றுப் போட்டிகளை டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.