• Thu. Mar 28th, 2024

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட டி.20 போட்டி; புதிய அட்டவணை இதோ

Jul 27, 2021

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில்,இரு அணிகள் இடையேயான டி.20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டி.20 தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று (ஜூலை 27) நடக்கவிருந்தது.

இந்தநிலையில்,இந்திய அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாவது டி.20 போட்டி நாளை (ஜூலை 28) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது டி.20 போட்டி – ஜூலை 28

மூன்றாவது டி.20 போட்டி – ஜூலை 29

இதேவேளை க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.