• Sat. Jul 27th, 2024

இந்திய அணிக்கு ” இவர்தான்” கேப்டன்!

Sep 13, 2021

உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கும், ,டி-20 தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரி முக்கியத் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போதைய கேப்டன் கோலி டி-20 உலகக் கோப்பை தொடருக்குப் பின் பேட்டிங்கில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும், இந்த அறிவிப்பை அவரே வெளியிடுவார் எனவும் தகவல் வெளியானது.

இது கோலியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தற்போது பிசிசிசி பொருளாளர் அருண் துமால் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

அதில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாகச் செயல்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.