
இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாரும் எதிர்பாராத விதமாக இந்தப் பொறுப்பு தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ண தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எவரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு – 20 உலகக்கிண்ணத்தை வென்றது.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டமை அந்த அணிக்கு மிகப் பெரும் பலமாக அமைந்துள்ளது.