• Sun. Sep 8th, 2024

பிரித்தானிய மக்களுக்கு அவசர அறிவிப்பு – போரிஸ் ஜோன்சன்

Jun 15, 2021

இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, பிரித்தானியாவினை கொரோனாவில் இருந்து விடுபட்ட நாடாக அறிவிக்க இருந்தார் போரிஸ் ஜோன்சன்.

ஆனால் திடீரென இந்திய கொரோனா தொற்ற ஆரம்பித்ததால், அது பிரித்தானியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம்(14) மாலை தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய போரிஸ் ஜோன்சன். நாட்டு மக்களுக்கு அவசர அறிவித்தலை விடுத்தார்.

அதன் பிரகாரம் அடுத்த மாதம் 19 வரை லாக் டவுன் தளர்வுகளை தாம் பிற்போட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.