பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தார்.
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவில் வளாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கியுள்ளனர்
பிரியா ஆனந்த் திருப்பதி வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.
இந்த நிலையில் பிரியாமணி தற்போது காசேதான் கடவுளடா மகன் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
இதேவேளை ஏற்கனவே நடிகர் பிரபு மற்றும் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குனர்
வம்சி ஆகியோர் திருப்பதி சென்று வந்தனர்.