• Thu. Apr 18th, 2024

பிக்பாஸ் ஜூலி காதலன் குறித்து பரபரப்பு புகார்!

Dec 4, 2021

ஜூலி தன் காதலர் மீது கொடுத்த புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை துண்டித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் (BiggBoss) என்ற தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி (எ) மரியா ஜூலியானா(26). இவர் தனது பெற்றொருடன் பரங்கி மலை ஈரோப்பியன் லேன் பகுதியில் வசித்து வருகிறார். ஜூலி (Julie) அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரில் அண்ணா நகர் 2ஆவது அவென்யூவில் உள்ள தமிழகத்தின் மிகப்பிரபலமான அழகு நிலையத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்த அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ்(26) என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் பணம் மற்றும் தங்க நகைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்த மனிஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்த நிலையில், மனிஷுக்கு தான் பல்சர் இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் வாங்கிக் கொடுத்து 2.50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாக ஜூலி புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாக பழக மனீஷ் உடனான காதலை துண்டித்து அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜூலியின் இந்த திடீர் காதல் துண்டிப்பை தாங்கிக்கொள்ள இயலாத மனிஷ் ஜூலிக்கு கால் செய்து தன்னை பிரிந்து செல்ல வேண்டாம் எனவும் அவர் இல்லாமல் தன்னால் வாழ இயலாது எனவும் கூறி அழுது அடிக்கடி கால் செய்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இதனால் மனிஷை மிரட்டுவதற்காக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது

. இதனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார்.

காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கொடுக்கப்பட்ட புகாரில் ஜூலியே காதலை மறுத்ததாக கூறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.