• Mon. Jul 22nd, 2024

யாழில் தொடரும் கொரோனா மரணங்கள் – மேலும் மூவர் பலி

Aug 24, 2021

யாழ்.மாவட்டத்தில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஊர்காவற்றுறையை சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவரும், யாழ்.மானிப்பாய் வீதியை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவருமாக மாவட்டத்தில் 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியிருக்கின்றது.