• Wed. Apr 17th, 2024

யாழில் வெளிநாடு செல்வதற்காக பீ.சி.ஆர் செய்து கொண்டவர்களுக்கு கொரோனா

Feb 17, 2022

வெளிநாடு செல்வதற்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்துகொண்ட 7 பேர் உட்பட 13 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி யாழ். போதனா வைத்தியசாலையில் 10 பேருக்கும், தனியார் வைத்தியசாலை ஊடாக ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்குமாக 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 10 போில் 7 பேர் வெளிநாடு செல்வதற்காக பரிசோதனை செய்து கொண்டவர்கள் என கூறப்படுகின்றது.