இலங்கையில் நேற்றைய தினம் 3,039 புதிய கொரோனா நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
![](https://tamil4.com/wp-content/uploads/2021/06/COVID-19-positive-1024x569.jpg)
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 345,118 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்று(12) கொரோனா தொற்றுக்குள்ளான 2,049 நபர்கள் கொவிட் -19 இலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்ட நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 302,455 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது இலங்கை முழுவதும் 37,043 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.