• Sun. Jul 21st, 2024

புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது – SLMA

Nov 29, 2021

புதிதாக கண்டறியப்பட்ட Omicron எனப்படும் புதிய கொரோனா மாறுபாடு நாட்டிற்குள் வருவதை தடுக்க முடியாது என இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) தெரிவித்துள்ளது.

புதிய மாறுபாடு நாட்டிற்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்தது போல் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவர், கலாநிதி பத்மா குணரத்ன தெரிவித்தார்.

புதிய மாறுபாட்டின் நுழைவு தாமதமாகலாம் என்றாலும், அது ஒருபோதும் நாட்டிற்குள் நுழையாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் அவர் எடுத்துரைத்தார்.

எவ்வாறாயினும், சுகாதார விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.