• Thu. Apr 25th, 2024

வரலாற்றில் இன்று ஏப்ரல் 04

Apr 4, 2022

ஏப்ரல் 4 கிரிகோரியன் ஆண்டின் 94 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 95 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 271 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு.

1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1660 – ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வெளியிட்டார்.

1721 – ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார்.

1812 – அமெரிக்கத் தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான 90-நாள் வணிகத் தடையை சட்டமாக்கினார்.

1814 – முதலாம் நெப்போலியன் முதற்தடவையாக முடி துறந்து தனது மகன் இரண்டாம் நெப்போலியனை பிரான்சின் மன்னனாக அறிவித்தார்.

1818 – 13 சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களைக் கோடுகளுடனும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நட்சத்திரம் (அப்போது 20) என்றவாறான அமெரிக்கக் கொடியை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அங்கீகரித்தது.

1841 – வில்லியம் ஹென்றி ஹாரிசன் நுரையீரல் அழற்சியினால் காலமானார். பதவியில் இருக்கும் போது இறந்த முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் இவராவார்.

1850 – இங்கிலாந்தின் கொட்டன்ஹாம் என்ற ஊரின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.

1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றிய அடுத்த நாள் அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகருக்குப் பயணம் மேற்கொண்டார்.

1866 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் கொலை முயற்சி ஒன்றில் இருந்து மயிரிழையில் தப்பினார்.

1905 – இந்தியாவில் இமாச்சலப் பிரதேசம், காங்ரா, தரம்சாலா ஆகிய இடங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 20,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1925 – செருமனியில் எஸ்எஸ் காவல்படை என அழைக்கப்படும் சுத்ஸ்டாப்பெல் அமைக்கப்பட்டது.

1933 – அமெரிக்கக் கடற்படையின் வான்கப்பல் ஏக்ரோன் நியூ செர்சி கரையில் மூழ்கியது.

1939 – இரண்டாம் பைசல் ஈராக்கின் மன்னரானார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய-அமெரிக்கப் படையினரால் புக்கரெஸ்ட் நகர் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் குறைந்தது 3,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனியில் ஓர்டிரஃப் கட்டாய பணி முகாமை விடுவித்தன.

1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவத்தினர் அங்கேரியை செருமனியிடம் இருந்து விடுவித்துத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1949 – பனிப்போர்: பன்னிரண்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையில் ஒருங்கிணைந்து நேட்டோ அமைப்பை உருவாக்கின.

1960 – செனிகல், மற்றும் பிரெஞ்சு சூடானை உள்ளடக்கிய மாலி கூட்டமைப்புக்கு விடுதலை தர பிரான்சு ஒப்புக் கொண்டது.

1968 – அமெரிக்காவின் கறுப்பினத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் டென்னிசி மாநிலத்தில் மெம்பிசு நகரில் யேம்சு ரேய் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.

1968 – நாசாவின் அப்பல்லோ 6 விண்கப்பல் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1969 – மருத்துவர் டெண்டன் கூலி உலகின் முதலாவது தற்காலிக செயற்கை இதயத்தைப் பொருத்தினார்.

1973 – உலக வணிக மையத்தின் இரட்டைச் சிகரங்கள் நியூயார்க்கில் திறக்கப்பட்டன.

1975 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பில் கேட்ஸ், பவுல் ஆல்லென் ஆகியோரின் கூட்டில் ஆல்புகெர்க்கியில் தொடங்கப்பட்டது.

1975 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அனாதைக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 172 பேர் உயிரிழந்தனர்.

1979 – பாகிஸ்தானின் முன்னாள் அரசுத்தலைவர் சுல்பிக்கார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார்.

1981 – ஈரான் – ஈராக் போர்: ஈரான் வான்படை 50 ஈராக்கிய வானூர்திகளைத் தாக்கி அழித்தது.

1983 – சாலஞ்சர் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

1984 – அமெரிக்கத் தலைவர் ரானல்ட் ரேகன் வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்யும் கோரிக்கையை முன்வைத்தார்.

1991 – பென்சில்வேனியாவில் உலங்குவானூர்தி ஒன்று ஆரம்பப் பள்ளி ஒன்றின் மீது வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த மேலவை உறுப்பினர் ஜோன் ஐன்சு உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

1999 – பாப்பரசரின் வேண்டுகோளையும் புறக்கணித்து நேட்டோ வான்படைகள் உயிர்த்த ஞாயிறு நாளன்று முன்னாள் யுகோசுலாவியா மீது குண்டுகளை வீசின.

2002 – அங்கோலாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அங்கோலா அரசும் யுனிட்டா போராளிகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

2009 – பிரான்சு நேட்டோ அமைப்பில் மீண்டும் இணைந்தது.

2013 – இந்தியாவின் தானே நகரில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 70 பேர் உயிரிழந்தனர்.