• Wed. Jul 24th, 2024

வரலாற்றில் இன்று ஏப்ரல் 05

Apr 5, 2022

ஏப்ரல் 5 கிரிகோரியன் ஆண்டின் 95 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 96 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 270 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார்.

1081 – முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார்.

1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.

1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.

1710 – ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது.

1722 – டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் ஈஸ்டர் தீவைக் கண்டுபிடித்தார்.

1792 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

1795 – பிரான்சுக்கும், புருசியாவுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.

1818 – ஜோஸ் டெ சான் மார்ட்டின், பெர்னார்டோ ஓ’இகின்சு தலைமையில் சிலியின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.

1867 – இலங்கையில் முதலாவது சுற்றுலாப் பயண தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1879 – பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.

1897 – கிரேக்கத்துக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

1900 – கிரீட்டில் தொல்லியலாளர்கள் சித்திர எழுத்துகளுடன் கூடிய பெருந்தொகையான களிமண் பலகைகளைக் கண்டுபிடித்தனர்.

1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பயணத்தை முடித்தார்.

1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.

1932 – நியூபவுன்லாந்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கலவரக்காரர்கள் கொலோனியல் கட்டிடத்தைக் கைப்பற்றினர்.

1936 – மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் உயிரிழந்தனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் போர்க்கப்பல்கள் உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையைத் தாக்கின. தென்மேற்குப் பகுதியில் கோர்ன்வால், டோர்செட்சயர் என்னும் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் மூழ்கின.

1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பெல்ஜியத்தின் மீது தவறுதலாக குண்டுகளை வீசியதில் 209 சிறுவர்கள் உட்பட 900 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் செருமனியரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1945 – பனிப்போர்: யுகோசுலாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அரசுத்தலைவர் யோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.

1946 – 11 மாதங்கள் ஆக்கிரமிப்பின் பின்னர் சோவியத் படைகள் டென்மார்க் தீவான போர்ன்ஹோல்மை விட்டு விலகின.

1949 – அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் உயிரிழந்தனர்.

1951 – இலங்கை,கட்டுநாயக்காவில் 34 பேருடன் சென்ற பிரித்தானிய வான்படை ஏசுட்டிங்சு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது. உயிரிழப்புகள் இல்லை.

1956 – கியூபப் புரட்சி: பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவுடன் போரை அறிவித்தார்.

1956 – இலங்கைப் பொதுத்தேர்தலில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான மகாஜன எக்சத் பெரமுன அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது.

1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1964 – பூட்டான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1969 – வியட்நாம் போர்: அமெரிக்க நகரங்களில் போருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

1971 – இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1976 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.

1981 – தமிழீழப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

1991 – அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் அத்திலாந்திக் ஏர்லைன்சு வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் விண்வெளி வீரர் சொன்னி கார்ட்டர் உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 23 பேரும் உயிரிழந்தனர்.

1992 – பெருவின் அரசுத்தலைவர் ஆல்பர்ட் புஜிமோரி நாடாளுமன்றத்தை இராணுவ உதவியுடன் கலைத்தார்.

1998 – அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், சப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.

2009 – வட கொரியா சர்ச்சைக்குரிய தனது குவாங்மியோங்சொன்-2 என்ற ஏவுகணையை யப்பான் மீதாக ஏவியது.

2010 – மேற்கு வர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் சிக்கி 29 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.