• Mon. Mar 25th, 2024

ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் 7,000 பரிசு; அறிவித்த பிரபல நாடு

Jul 27, 2021

கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மக்களின் பழக்க வழக்கங்கள் மாறி உள்ளதனால் பலரின் உடல் எடை அதிகரித்துள்ளது.

சிற்றுண்டிகளை சாப்பிடுவதும், வேண்டிய நேரத்தில் சாப்பிடாததும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் பிரிட்டன் அரசு உடல் எடை குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 41 சதவீதம் மக்கள் தங்களது உடல் எடை அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று இங்கிலாந்தில் ஊரடங்கு காரணமாக உடல் எடை அதிகரித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் இங்கிலாந்தில் உடல் பருமனை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதைத் தொடர்ந்து உடல் பருமன் கொண்ட சுமார் 7 இலட்சம் பேருக்கு ஆரோக்கியமான உணவு உண்டால் 7 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அவர்களது தினசரி உணவு பழக்கம், சந்தையில் அவர் வாங்கும் உணவு வகைகள் அனைத்தும் ஒரு செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு இந்த வெகுமதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.