• Thu. Mar 28th, 2024

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கத்தினை வென்றது இந்தியா!

Aug 7, 2021

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மேலும், இன்று(07) சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சாதனை நீரஜ் சோப்ராவால் இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஒலிம்பிக் அதெலெட்டிக்கில் முதல் தங்கம் வென்று சாதித்துள்ளது.

ஒலிம்பிக்கில் வரலாற்றில் நீரஜ் சோப்ரா வென்றது இந்தியாவின் 10 வது தங்கம் ஆகும். ஏற்கனவே இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் கடந்த 1928, 1932, 1936, 1948, 1952, 1956,1964,1980 ஆகிய ஆண்டுகளில் தங்க வென்று சாதித்தது. கடந்த 2008 ஆம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதித்தார்.

இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.