• Sat. Jul 27th, 2024

வடக்கு பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

Nov 10, 2021

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளின் செயற்பாடுகளும் நாளை தொடக்கம் வழமைபோல நடைபெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர் மழையால் நேற்று யாழ்.மாவட்டப் பாடசாலைகளும் இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் நாளை தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளின் செயற்பாடுகளும் வழமைபோல நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.