• Tue. Mar 26th, 2024

இலங்கையில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்கள்; ஜனாதிபதியின் அறிவிப்பு!

Oct 15, 2021

தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதேவேளை, கொவிட் ஒழிப்புக்காக சுகாதாரத் தரப்பினர் பின்பற்றிய வீட்டுத் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டமானது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட பாராட்டைப் பெற்றுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய, கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.