• Fri. Jul 26th, 2024

இலங்கையில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை

Sep 11, 2021

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறித்த 157 பேரும் நேற்றைய தினம் யிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 411,233 பூரணமாக குணமடைந்துள்ளனர்.