• Tue. Jul 23rd, 2024

நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொரோனா!

Jun 7, 2021

நாட்டில் மேலும் 1,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் கூறினார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 207,293 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,742 ஆக அதிகரித்துள்ளது.