• Thu. Apr 25th, 2024

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவை; குவைத் அறிவிப்பு

Aug 19, 2021

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கை , இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற குவைத் அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தாரெக் அல்-மஸ்ரெம் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் அவசரக் குழு விதித்த விதிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.