• Sat. Jul 27th, 2024

நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்; காத்தான்குடியில் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

Sep 4, 2021

நியூசிலாந்து நகரில் நேற்றைய தினம் அந்நாட்டு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பிரஜை உயிரிழந்திருந்த நிலையில், அது தொடர்பில் காத்தான்குடியில் தீவிர விசாரணனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நபரின் தாயாரிடம் தீவிர விசாரணைகளை இலங்கை புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை முதல் முப்படையினரும் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்தான்குடியில் பிறந்து 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்ற குறித்த இளைஞன் அங்கு ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டார் என நியூசிலாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞனின் சொந்த இடமான காத்தான்குடியில் வசிக்கும் அவரின் தாயாரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை சந்தேக நபரின் தகப்பன் மற்றும் சகோதரங்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தயார் மட்டும் காத்தான்குடியில் வசித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.