• Wed. Apr 17th, 2024

இலங்கையின் சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். நிலையம்

Sep 25, 2021

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று(25) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். சோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

3 மணித்தியாலங்களில் பி.சி.ஆர் பெறுபேற்றை பெற்று கொடுக்கும் நோக்கில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆய்வுக்கூட கட்டமைப்பின் ஊடாக மணித்தியாலத்திற்கு 500 பி.சி.ஆர். முடிவுகளையும் நாளொன்றில் 7 ஆயிரம் முடிவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.