• Tue. Sep 3rd, 2024

இலங்கையில் ஒமிக்ரோன் அலைக்கு இடமில்லை

Jan 3, 2022

இலங்கையில் ஓமிக்ரான் அலை பரவும் என்பதை நம்பமுடியாது என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதால் அவ்வாறானதொரு நிலை ஏற்படாது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், ஓமிக்ரானில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸை விரைவில் பெறுவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மக்கள், முன்பு போலவே சுகாதார விதிகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.