• Thu. Apr 25th, 2024

ரிசாத் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது!

Jul 23, 2021

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுதியை வேலைக்கமர்த்திய தரகர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ரிசாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவத்தையடுத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

குறித்த 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸாரினால் பல்வேறு கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றையதினம் முன்னாள் அமைச்சர் ரிசாத்பதியுதீனின் மனைவியிடம் வீட்டிற்கு சென்ற பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.