• Fri. Apr 26th, 2024

இலங்கை பாதுகாப்புப் படைக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை!

Dec 11, 2021

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவருக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டோனி பிளின்கன் இதை தெரிவித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க இருவருக்குமே பயணத்தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.