• Tue. Jul 23rd, 2024

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் கோழி இலவசம் – எந்த நாடு தெரியுமா?

Jun 17, 2021

இந்தோனேஷியாவில் உள்ள சிப்பனாஸ் (Cipanas) மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முதியவர்களுக்கு உயிர் கோழி ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்த போதும் தடுப்பூசி செலுத்த பலர் தயங்குவதால் இதுவரை 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து முதியவர்களிடம் தடுப்பூசி செலுத்தும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு உயிர் கோழி ஒன்றை சுகாதாரத்துறையினர் வழங்கி வருகின்றனர்.