• Sun. Jul 21st, 2024

ஆப்கானில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் தொடர்பில் கடும் விமர்சனம்!

Aug 25, 2021

தலிபான்களிடம் இருந்து தப்பிப்பிழைப்பதற்காக நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகள் காபூல் விமான நிலயத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் மீட்புவிமானங்கள் அங்குள்ள நாய்களை அழைத்துச்செல்கின்றமை பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றது.

கடந்த 20 வருடங்களாக அமெரிக்கச் சார்பு நிலைப்பாடு எடுத்ததன் காரணமாக தலிபான்களால் உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளான நிலையில், எப்படியாவது அப்கானிஸ்தானைவிட்டுத் தப்பித்துச் சென்றுவிடவேண்டும் என ஆயிரக் கணக்கான அப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் தவிக்கின்றனர்.

மக்கள் இவ்வறு அவதியில் இருக்க அமெரிக்க இராணுவத்தின் நாய்கள் விமானங்களில் ஏற்றப்பட்டு பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சி வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு பக்கம் நெருக்கி அடித்துக்கொண்டு மக்கள் மிருங்கள் போன்று விமானங்கள் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட, மறு பக்கம் ராணுவ நாய்களுக்கு தனி இருக்கைகள் வழங்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்ற காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.