• Wed. Jul 24th, 2024

இத்தாலியில் மகள்மாரைக் கொலை செய்த தாய்

Oct 27, 2021

இத்தாலியின் வெரோனா நகரிலுள்ள வீடொன்றில் 11 வயது மற்றும் 3 வயது மகள்மாரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் தாய் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனது இரு மகள்களையும் கொலை செய்ததாகக் கூறப்படும் இலங்கைப் பெண் தற்போது தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளார் என இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண், நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது.

இரண்டு குழந்தைகளும் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண் தனது இலங்கைக் கணவருடன் இத்தாலி நோக்கிச் சென்றிருந்த வேளையில் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து, தனது இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.