• Sat. Jul 20th, 2024

தூங்கிய அதிகாரிகள் – தப்பிச் சென்ற கைதிகள்

Sep 9, 2021

பலத்த பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தினத்தை சேர்ந்த 6 சிறைக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த சிறையில் இருந்து சுரங்கம் அமைத்து 6 பாலஸ்தீன கைதிகளும் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கைதிகள் சுரங்கப் பாதையில் இருந்து சுற்றுச் சுவரைத் தாண்டி வெளியேறுவதும், கண்காணிப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் தூங்கியபடி இருப்பதுமான சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன.