• Fri. Jul 26th, 2024

சீனியர் வீரர்களுக்கு கங்குலி அட்வைஸ்

Feb 3, 2022

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான ரகானே, புஜாரா ஆகியோர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட செல்வார்கள் என நம்புவதாக கங்குலி தெரிவித்துள்ளார்.

ரஞ்சி போட்டிக்கு செல்லுங்கள்..!! ரன்கள் குவியுங்கள்..!! அணிக்கு திரும்புங்கள்..!! 2 சீனியர் வீரர்களுக்கு கங்குலி அட்வைஸ்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் இருவரும் சரியாக விளையாடவில்லை. இருவருடைய 12 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டுமே கிடைத்தன.

இதனால் அணியில் இருந்து இருவரையும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தன. ஆனால், பிசிசிஐ இருவர் மீதும் நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில், பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, இருவரும் ரஞ்சி டிராபி தொடருக்கு விரைவார்கள். இங்கு சென்று ரன்கள் குவித்து மீண்டும் ஃபார்முக்கு வருவார்கள் என்ற நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடிய பின்னர், ரஞ்சி போட்டிக்கு செல்வதால், எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ரஞ்சி டிராபி மிகப்பெரிய தொடர். நாங்கள் அதில் விளையாடியுள்ளோம் என்றார்.

கங்குலி ஃபார்ம் இல்லாமல் தவித்தபோது, 2005-ல் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடி மீண்டும் அணிக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.