• Sat. Jul 20th, 2024

ஐ.பி.எல் : அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்!

Dec 1, 2021

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது.

அதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது .

அதில் மூன்று வீரர்கள் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டனர் .

ஜடேஜா (சென்னை) , ரோகித் சர்மா (மும்பை) , ரிஷாப் பண்ட் (டெல்லி ) ஆகிய அணிகள் இந்த வீரர்களை அதிகமான தொகைக்கு (ரூ.16 கோடி) தக்கவைக்கப்பட்டுள்ளனர்