கேரளாவில் மேலும் 29,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதுடன் இதுவரை 21,422 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,682 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 25,910 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 142 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
தற்போது கேரளாவில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 39,09,096 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 21,422 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 065 பேர் உள்ளனர்.
கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.