• Sat. Jul 20th, 2024

தமிழகத்தில் 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று

Dec 23, 2021

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்துள்ள 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகைத் தந்த 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 82 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அனைத்து மாதிரிகளும், மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.