• Tue. Oct 22nd, 2024

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 05

Aug 5, 2021

ஆகத்து 5 கிரிகோரியன் ஆண்டின் 217 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 218 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 148 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

25 – சின் அரசமரபு வீழ்ந்ததை அடுத்து, குவாங்வு சீனப் பேரரசராகத் தன்னை அறிவித்து, ஆன் அரசமரபை மீண்டும் கொண்டுவந்தார்.135 – உரோமை இராணுவம் பெட்டார் நகரைக் கைப்பற்றி அங்கு கிளர்ச்சியில் ஈடுபட்ட ஆயிரக்கனக்கானோரைக் கொன்றது.

910 – தென்மார்க்கு இராணுவத்தினரின் இங்கிலாந்து மீதான முக்கியமான தாக்குதல் எட்வர்டு மன்னர் தலைமையில் முறியடிக்கப்பட்டது.

1100 – இங்கிலாந்தின் மன்னராக முதலாம் என்றி வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடிசூடினார்.

1305 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டார்.

1583 – சேர் ஹம்பிறி கில்பேர்ட் வட அமெரிக்காவில் இங்கிலாந்துக்கான முதலாவது குடியேற்ற நாட்டை (தற்போதைய) சென் ஜான்சு, நியூபவுண்லாந்தில் அமைத்தார்.

1600 – இசுக்காட்லாந்து மன்னர் ஆறாம் யேமசு மீதான கோரி கோமகன் ஜான் ரத்வென்னின் கொலை முயற்சி இடம்பெற்றது.

1689 – 1,500 இரக்கேசு இனத்தவர்கள் புதிய பிரான்சின் (இன்றைய கியூபெக்) லாச்சின் நகரைத் தாக்கினர். 250 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1716 – ஆசுத்திரிய-துருப்பிப் போர்: பெத்ரோவராதின் சமரில் துருக்கியின் ஐந்தில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1806 – பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

1816 – பிரான்சிசு ரொனால்டு கண்டுபிடித்த முதலாவது இயங்கக்கூடிய மின்சாரத் தந்தியை பிரித்தானிய அரசு ஏற்க மறுத்தது. பழைய அணுகல் குறியீட்டையே தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்தது.

1824 – சமோசு நகரில் இடம்பெற்ற சமரில் கிரேக்கக் கடற்படையினர் உதுமானிய, எகிப்தியக் கடற்படையினரைத் தோற்கடித்தனர்.

1860 – சுவீடன் மன்னர் பதினைந்தாம் சார்லசு நோர்வே மன்னராக முடிசூடினார்.

1861 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை சவுக்கடித் தண்டனையை இல்லாதொழித்தது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: போர் முயற்சிகளுக்கு நிதி திரட்டும் முகமாக அமெரிக்கக் கூட்டரசு முதல் தடவையாக வருமான வரியை அறவிட்டது. $800 இற்கும் அதிகமான வருமானங்களுக்கு 3% வரி அறவிட்டது, 1872 இல் இவ்வரிவிதிப்பு நிறுத்தப்பட்டது.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பினர் லூசியானாவில் மிசிசிப்பி ஆறு வழியே அமெரிக்கப் படைகளை விரட்டினர்.

1874 – சப்பான் அஞ்சல் சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது.

1884 – விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயோர்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது.

1906 – ஈரானில் அரசியல்சட்ட முடியாட்சியைக் கொண்டுவர மன்னர் மொசாபர் அதின் சா இணங்கினார்.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனியின் கோனிஜொன் லூயிசு என்ற கப்பல் பிரித்தானியப் போர்க்கப்பலினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1914 – முதலாவது மின்சார சைகை விளக்கு அமெரிக்காவில் கிளீவ்லாந்தில் நிறுவப்பட்டது.

1916 – முதலாம் உலகப் போர்: உரோமானி சமரில், கூட்டுப் படைகள் உதுமானியர்களின் தாக்குதலை முறியடித்து, சூயசு கால்வாயைத் தம் வசப்படுத்தினர்.

1926 – அங்கேரிய மாயக்கலை வல்லுநர் ஆரி உடீனி 91 நிமிடங்கள் நீருக்கடியில் மூடிய தாங்கி ஒன்றில் இருந்து சாதனை புரிந்தார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் லாத்வியாவைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டது.

1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்து தீவிரவாதிகள் வார்சாவாவில் நாட்சி ஜெர்மனியின் வதை முகாமைத் தாக்கி 348 யூத சிறைக் கைதிகளை விடுவித்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவில், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கௌரா நகரில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.

1949 – எக்குவாடோரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 6,000 பேர் உயிரிழந்தனர், 50 நகரங்கள் அழிந்தன.

1958 – தமிழ் மொழிக்கான சிறப்புப் பயன்பாட்டுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய எதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்தன.

1960 – புர்க்கினா பாசோ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1962 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.

1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ லாஸ் ஏஞ்சலசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.

1963 – பனிப்போர்: அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் ஆகியன காற்று மண்டலம், விண்வெளி, மற்றும் நீருக்கடியில் அணுச் சோதனைகளை நிறுத்த உடன்பட்டன.

1965 – பாக்கித்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உள்ளூர் மக்கள் வேடத்தில் இந்தியாவிற்குள் புகுந்தனர். இந்திய-பாக்கித்தான் போர் ஆரம்பமானது.

1971 – முதலாவது பசிபிக் தீவுகளின் மாநாடு நியூசிலாந்து, வெலிங்டன் நகரில் ஆரம்பமானது.

1973 – சோவியத் ஒன்றியம் மார்ஸ் 6 விண்கலத்தை ஏவியது.

1979 – ஆப்கானித்தானில் மாவோயிசப் போராளிகள் கம்யூனிச அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

1981 – வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 11,359 விமானப் போக்குவரத்துக் கட்டுப்படுத்துனர்களை அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் பணியில் இருந்து நீக்கினார்.

1984 – வங்காளதேசம், டாக்கா நகரில் வங்கதேச வானூர்தி ஒன்று தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் உயிரிழந்தனர்.[3]

1989 – நிக்கராகுவாவில் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி பெரும் வெற்றி பெற்றது.

1995 – யுகோசுலாவியப் போர்கள்: குரோவாசியாவில் செர்பியர்களின் முக்கிய நகரமான கினினை குரோவாசியப் படைகள் கைப்பற்றினர். இந்நாள் குரோவாசியாவில் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

2003 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மரியட் உணவு விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காயமடைந்தனர்.

2010 – சிலியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 33 தொழிலாளர்கள் 69 நாட்கள் சுரங்கத்தில் சிக்கினர்.

2010 – ஆப்கானித்தான், படாக்சான் மாகானத்தில் பன்னாட்டு நிவாரணப் பணியாளர்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2012 – அமெரிக்கா, விஸ்கொன்சின் மாநிலத்தில் சீக்கியக் கோவில் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கொலையாளி பின்னர் தற்கொலை செய்து கொண்டான்.