• Fri. Apr 19th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 15

Jul 15, 2021

சூலை 15 கிரிகோரியன் ஆண்டின் 196 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 197 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர்.

1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.

1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது.

1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.

1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் மன்னரின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டு, நான்கு துண்டுகளாக வெட்டப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

1741 – உருசியக் கப்பல் கலபதி அலெக்சி சிரிக்கோவ் தென்மேற்கு அலாஸ்காவைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே அலாஸ்காவில் தரையிறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவர்.

1799 – நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.

1815 – நெப்போலியப் போர்கள்: பிரான்சின் முதலாம் நெப்போலியன் பெலரபோன் என்ற கப்பலில் வைத்து சரணடைந்தான்.

1816 – பிரெஞ்சு இயற்பியலாளர் அகத்தீன் பிரெனெல் ஒளியின் விளிம்பு விளைவுக்கான பின்னிணைப்பாகத் தனது புகழ் பெற்ற பிரெனெல் வலயங்கள் பற்றி அறிமுகப்படுத்தினார்.

1823 – உரோமை நகரில் பண்டைய சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் தீயில் சேதமடைந்தது.

1834 – எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மன்று 356 ஆண்டுகளின் பின்னர் கலைக்கப்பட்டது.

1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

1860 – இலங்கையின் பிரதம நீதியரசராக சேர் எட்வேர்ட் செப்பர்ட் கிறீசி நியமிக்கப்பட்டார்.

1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.

1870 – ரூபர்ட்சுலாந்தும் வட-மேற்கு பிராந்தியமும் கனடாவுக்குக் கொடுக்கப்பட்டன. இப்பெரும் நிலப்பகுதிகளில் இருந்து மானிட்டோபா, வடமேற்கு நிலப்பகுதிகள் ஆகிய கனடிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1888 – சப்பானின் பண்டாய் சுழல்வடிவ எரிமலை வெடித்ததில் 500 பேர் உயிரிழந்தனர்.

1916 – வாசிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் இணைந்து போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1927 – வியென்னாவில் 89 ஆர்ப்பாட்டக்காரர் ஆத்திரியக் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1946 – ஐக்கிய இராச்சியம் வடக்கு போர்னியோவை (இன்றைய மலேசியாவின் சபாவில்) தனதாக்கியது.

1955 – அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். பின்னர் மேலும் 34 பேர் கையெழுத்திட்டனர்.

1959 – ஐக்கிய அமெரிக்காவில் எஃகுத் தொழிலாளர்களின் பணி நிறுத்தம் ஆரம்பமானது. இது அமெரிக்க வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாட்டு எஃகு இறக்குமதிக்கு வழிவகுத்தது.

1974 – சைப்பிரசு, நிக்கோசியாவில் கிரேக்க ஆதரவு தேசியவாதிகள் இராணுவப் புரட்சியை ஆரம்பித்து அரசுத்தலைவர் மக்காரியோசைப் பதவியில் இருந்து அகற்றி நிக்கோசு சாம்ப்சனைத் தலைவராக்கினார்கள்.

1975 – விண்வெளிப் போட்டி: முதலாவது அமெரிக்க-சோவியத் இணைந்த விண்வெளித் திட்டம் அப்பல்லோ-சோயூசு விண்கலம் ஐந்து அமெரிக்க-சோவியத் விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.

1983 – பாரிசில் ஓர்லி விமானநிலையத்தில் ஆர்மீனியத் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.

1991 – இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.

1998 – இலங்கை, வவுனியாவில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சண்முகநாதன் கொல்லப்பட்டார்.

2002 – அமெரிக்க ஊடகவியலாளர் டேனியல் பெர்ல்லைப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த அகமது சேக் கிற்கு பாக்கித்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003 – டைம் வார்னெர் நெட்சுகேப் நிறுவனத்தைக் கலைத்தார். இதே நாளில் மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

2006 – டுவிட்டர் சமூக வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது.

2014 – மாஸ்கோவில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 24 பேர் உயிரிழந்தனர், 160 பேர் காயமடைந்தனர்.