• Thu. Jul 25th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 16

Jul 16, 2021

சூலை 16 கிரிகோரியன் ஆண்டின் 197 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 198 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும்.

997 – கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர்.

1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது.

1232 – எசுப்பானியாவின் அர்சோனா நகரம் விடுதலையை அறிவித்து, முகம்மது இப்னு யூசுப் என்பவரை ஆட்சியாளராக்கியது.

1377 – இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் ரிச்சார்டு முடிசூடினார்.

1661 – ஐரோப்பாவின் முதலாவது வங்கித்தாள்கள் சுவீடன் வங்கியினால் வெளியிடப்பட்டன.

1790 – கொலம்பியா மாவட்டம் அமெரிக்காவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

1809 – லா பாஸ் (இன்றைய பொலிவியாவில்) எசுப்பானிய முடியாட்சியில் இருந்து விடுதலையை அறிவித்தது. எசுப்பானிய அமெரிக்காவின் முதலாவது தனிநாடு பெதுரோ டொமிங்கோ முரில்லோ தலைமையில் அமைக்கப்பட்டது.

1849 – காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை (இன்றைய கிளரீசியன் அமைப்பு) நிறுவினார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கனின் உத்தரவின் பேரில், அமெரிக்க ஒன்றியப் படைகள் வர்ஜீனியாவினுள் 25-மைல்கள் தூரம் அணிவகுத்துச் சென்றன.

1931 – எத்தியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் முதலாம் ஹைலி செலாசி வெளியிட்டார்.

1942 – பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.

1945 – மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம்-கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது.

1948 – 1948 அரபு – இசுரேல் போர்: இயேசு கிறிஸ்து வாழ்ந்த நாசரேத்து நகரத்தை இசுரேல் ஆக்கிரமித்தது.

1950 – உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் உருகுவே பிரேசிலை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

1950 – கொரியப் போர்: அமெரிக்கப் போர்க் கைதிகள் 31 பேர் வட கொரிய இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1951 – பெல்ஜியம் மன்னர் மூன்றாம் லியோபோல்ட் முடிதுறந்ததை அடுத்து, அவரது மகன் முதலாம் பாடோயின் புதிய மன்னராகப் பதவியேற்றார்.

1965 – பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

1969 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 11, நிலாவில் தரையிறங்க முதலாவது மனிதரை ஏற்றிக் கொண்டு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டது.

1979 – ஈராக்கிய அரசுத்தலைவர் அசன் அல்-பாக்கிர் பதவி துறந்ததை அடுத்து சதாம் உசேன் தலைவரானார்.

1983 – சில்லி தீவுகளில் பிரித்தானியாவின் உலங்குவானூர்தி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 20 பேர் உயிரிழந்தனர்.

1989 – புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1990 – பிலிப்பீன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,621 பேர் உயிரிழந்தனர்.

1990 – உக்ரைன் சோவியத் குடியரசின் நிலத்துக்கு அக்குடியரசின் நாடாளுமன்றம் உரிமை கோரியது.

1995 – காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

1999 – ஜான் எஃப். கென்னடியின் மகனும், மனைவியும் அத்திலாந்திக்குப் பகுதியில் மார்த்தாவின் திராட்சைத் தோட்டம் அருகே விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 94 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.

2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

2006 – தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் உயிரிழந்தனர்.

2013 – கிழக்கிந்தியாவின் பிகார் மாநிலத்தில் பாடசாலை ஒன்றில் நஞ்சு கலந்த மதிய உணவுண்ட 27 மாணவர்கள் உயிரிழந்தனர்.