• Fri. Jul 26th, 2024

வரலாற்றில் இன்று ஜூலை 26

Jul 26, 2021

சூலை 26 கிரிகோரியன் ஆண்டின் 207 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 208 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர்.

811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார்.

1309 – ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார்.

1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார்.

1745 – ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு நகரில் இடம்பெற்றது.

1758 – புனித லாரன்சு வளைகுடாவை பிரித்தானியப் படையினர் பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

1788 – நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.

1803 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.

1814 – சுவீடன்–நோர்வே போர் ஆரம்பமானது.

1847 – லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகத்து 8 இல் தூக்கிலிடப்பட்டான்.

1848 – கொழும்பு, பொரளையில் வரி விதிப்புக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை அடக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது.

1891 – தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.

1892 – பிரித்தானியாவின் முதலாவது இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தாதாபாய் நௌரோஜி தேர்தெடுக்கப்பட்டார்.

1897 – பசுத்தூன் பக்கிரி சைதுல்லா தலைமையில் 10,000 வீரரகள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.

1899 – டொமினிக்கன் குடியரசின் 27-வது அரசுத்தலைவர் யூலிசசு இயூரோ படுகொலை செய்யப்பட்டார்.

1936 – செருமனியும் இத்தாலியும் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஆதரவாக எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு இந்தோசீனாவை சப்பானியர் ஆக்கிரமித்ததை அடுத்து, அமெரிக்கா, பிரித்தானியா, நெதர்லாந்து ஆகியன சப்பானியரின் அனைத்து சொத்துகளையும் முடக்கினர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் மேற்கு உக்ரைனின் லிவீவ் நகரில் நுழைந்து அதனை நாட்சிகளிடம் இருந்து கைப்பற்றின. நகரின் 160.000 யூதர்களில் 300 பேர் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தனர்.

1945 – ஐக்கிய இராச்சியத்தில் நடந்த பொதுத்தேர்தல்களில் தொழிற் கட்சி பெரும் வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினரைச் சரணடையக் கோரும் உடன்படிக்கையில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகியன செருமனியில் பொட்சுடாம் நகரில் கையெழுத்திடப்பட்டன.

1945 – இரண்டாம் உலகப் போர்: இரோசிமாவில் போடப்படவிருந்த லிட்டில் பாய் அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் தினியான் தீவை அடைந்தது.

1947 – பனிப்போர்: நடுவண் ஒற்று முகமையை அமைக்கும் சட்டமூலத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் கையெழுத்திட்டார்.

1952 – எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் புவாத் மன்னன் ஆக்கப்பட்டான்.

1953 – பனிப்போர்: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கியூபப் புரட்சி ஆரம்பமானது.

1956 – சூயெசு நெருக்கடி: அஸ்வான் அணைக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.

1957 – குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொசு அர்மாசு கொல்லப்பட்டார்.

1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..

1963 – உலகின் முதலாவது புவி நிலைத் துணைக்கோள் சின்கோம் 2 அமெரிக்காவில் ஏவப்பட்டது.

1963 – யுகோசுலாவியாவில் ஸ்கோப்ஜே நகரில் (இன்றைய மாக்கடோனியக் குடியரசு) நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100 பேர் உயிரிழந்தனர்.

1965 – மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.

1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.

1977 – கனடா, கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகாரபூர்வ மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1993 – தென் கொரியாவில் மொக்போ வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஏசியானா ஏர்லைன்சு விமானம் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 116 பேரில் 68 பேர் உயிரிழந்தனர்.

1994 – எஸ்தோனியாவில் இருந்து உருசியப் ப் படைகளை வெளியேற்ற அரசுத்தலைவர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.

1999 – கார்கில் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

2005 – மும்பையில் 24 மணி நேரத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,000 பேர் வரை உயிரிழந்தனர்.

2008 – இந்தியாவின் அகமதாபாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர், 200 பேர் வரை காயமடைந்தனர்.

2016 – சூரிய ஆற்றலில் இயங்கும் சோலார் இம்பல்சு-2 வானூர்தி புவியைச் சுற்றி வந்தது.