• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 14

Jun 14, 2021

சூன் 14 கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.

1158 – மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது.

1216 – பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான்.

1276 – மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர்.

1287 – மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான்.

1381 – இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்டு மன்னர் உழவர் கிளர்ச்சித் தலைவர்களை சந்தித்தார். இலண்டன் கோபுரத்தை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர்.

1404 – வேல்சின் கிளர்ச்சித் தலைவர் ஒவெயின் கிளிந்துவர் தன்னை வேல்சு இளவரசராக அறிவித்து, இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றிக்கு எதிராக பிரான்சுடன் இனைந்தார்.

1618 – இடச்சின் முதலாவது செய்திப் பத்திரிகை ஆம்சுடர்டாமில் வெளியிடப்பட்டது.

1645 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நேசுபி சமரில் 12,000 அரசுப் படைகள் நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.

1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இடச்சுக் கடற்படை மெட்வே முற்றுகை முடிவுக்கு வந்தது. ஐந்து நாட்கள் நடந்த இச்சமரில் அரச கடற்படை பெரும் தோல்வியைக் கண்டது.

1690 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னர் முன்னாள் மன்னர் இரண்டாம் யேம்சுடன் சமரில் ஈடுபட அயர்லாந்து வந்தார்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது.

1789 – பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.

1800 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.

1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய இராணுவத்தை போலந்து பிரீத்லாந்து சமரில் (இன்றைய உருசிய கலினின்கிராது) தோற்கடித்தன.

1822 – சார்ல்ஸ் பாபேஜ் வித்தியாசப் பொறியொன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.

1830 – அல்ஜீரியாவில் பிரெஞ்சுக் குடியேற்றம் ஆரம்பமானது. 34,000 பிரெஞ்சுப் படையினர் அல்ஜியர்ஸ் நகரை அடைந்தனர்.

1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாக் குடியரசை அறிவித்தனர்.

1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.

1888 – வெள்ளை இராசா பிராந்தியங்கள் சரவாக் இராச்சியம் என்ற பெயரில் பிரித்தானியக் காப்புநாடாயின.

1900 – அவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.

1907 – நோர்வே பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.

1926 – பிரேசில் உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை செருமனி கைப்பற்றியது.

1940 – 728 போலந்துப் போர்க் கைதிகள் நாட்சிகளின் அவுசுவித்சு வதைமுகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.

1941 – அனைத்து செருமனிய, இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.

1941 – எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியத்தில் அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியினால் கைப்பற்றப்பட்ட கன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பல முறை தோல்வியடைந்ததை அடுத்து பிரித்தானிய இராணுவம் பெர்ச் நடவடிக்கையைக் கைவிட்டது.

1946 – மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்.[1]

1949 – இரண்டாம் அல்பேர்ட் என்ற ஒரு செம்முகக் குரங்கு வி-2 ஏவுகணை ஒன்றில் 134 கிமீ (83 மைல்) உயரத்திற்கு சென்று, விண்வெளிக்கு சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரைப் பெற்றது. இது விண்வெளியிலேயே உயிரிழந்தது.

1959 – கியூபாவில் இருந்து புறப்பட்ட ஒரு தொகை டொமினிக்கன் நாட்டவர்கள் ரபாயெல் துரூகிலோவின் தலைமையிலான எதேச்சாதிகார அரசைக் கவிழ்க்கும் பொருட்டு டொமினிக்கன் குடியரசுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் நால்வரைத் தவிர எஞ்சிய அனைவரும் பெரும்பாலானோர் அங்கு கொல்லப்பட்டனர்.

1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.

1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.

1982 – போக்லாந்து போர்: போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த அர்கெந்தீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்தன.

1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.

2002 – புவியருகு விண்பொருள் “2002 எம்என்” 75,000 கிமீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றது.

2003 – விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2014 – உக்ரைனின் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர்.

2017 – இலண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் உயரமான குடியிருப்பு மனைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர், 74 பேர் காயமடைந்தனர்.