• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 15

Jun 15, 2021

சூன் 15 கிரிகோரியன் ஆண்டின் 166 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 167 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள்.

844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார்.

923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார்,

1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.

1215 – இங்கிலாந்தின் ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது இலச்சினையைப் பதிந்தார்.

1219 – வடக்கு சிலுவைப் போர்கள்: லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது.

1246 – ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.

1300 – பில்போ நகரம் அமைக்கப்பட்டது.

1389 – கொசோவோவில் நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர்.

1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற் பயணத்தின் போது மர்தினிக்கு தீவில் கால் வைத்தார்.

1520 – திருத்தந்தை பத்தாம் லியோ மார்ட்டின் லூதரை உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்போவதாக எச்சரித்தார்.

1667 – முதலாவது மனித குருதி மாற்றீடு மருத்துவர் சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

1752 – பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை நிறுவினார்.

1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1776 – டெலவெயர் பென்சில்வேனியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தது.

1785 – ஆங்கிலக் கால்வாயை ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும்.

1808 – யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.

1836 – ஆர்கன்சா 25வது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

1844 – இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.

1846 – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.

1846 – இலங்கையின் அரச ஆசியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.[1]

1878 – குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.

1888 – முடிக்குரிய இளவரசர் வில்லியம் செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.

1896 – சப்பானில் சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

1904 – நியூயோர்க் நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1909 – இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலார்ட்சுவில் கூடி, இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை ஆரம்பித்தனர்.

1937 – கார்ல் வியென் தலைமையில் சென்ற செருமானியக் குழு நங்க பர்வதத்தில் பனிச்சரிவில் சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பாரிசு நகரைக் கைப்பற்றியதை அடுத்து நேச அணிப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.

1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் பிடியில் இருந்த சைப்பேனை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.

1944 – சசுக்காச்சுவான் பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது சோசலிச அரசு பதவியேற்றது.

1954 – ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1977 – எசுப்பானியாவில் முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் இடம்பெற்றது.

1978 – ஜோர்தான் மன்னர் உசைன், லீசா அலபி என்ர அமெரிக்கப் பெண்ணைத் திருமனம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார்.

1984 – யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கைக் கடற்படை ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

1991 – பிலிப்பீன்சில் பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

1994 – இசுரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை ஏற்படுத்திக் கொண்டன.

1996 – ஐரியக் குடியரசுப் படை (ஐஆர்ஏ) மான்செஸ்டர் நகரில் பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.

2014 – பாக்கித்தான் வடக்கு வசீரித்த்தானில் தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.