• Fri. Jul 26th, 2024

வரலாற்றில் இன்று ஜூன் 26

Jun 26, 2021

சூன் 26 கிரிகோரியன் ஆண்டின் 177 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 178 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

4 – உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான்.

363 – உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார்.

684 – இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1243 – கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர்.

1295 – போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார்.

1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா பொதுச்சங்கம் உரோமின் திருத்தந்தை பன்னிரெண்டாம் கிரகோரியையும் பன்னிரண்டாம் பெனடிக்டையும் இணைத்ததை அடுத்து, பெத்ரோசு பிலார்கசு எதிர்-திருத்தந்தை ஐந்தாம் அலெக்சாண்டர் ஆக நியமிக்கப்பட்டார்.

1460 – வாரிக் பிரபு ரிச்சார்டு நெவில், மார்ச் பிரபு எட்வர்டு ஆகியோர் தமது படைகளுடன் இங்கிலாந்து திரும்பி, இலண்டனுக்கு சென்றனர்.

1483 – மூன்றாம் ரிச்சர்டு இங்கிலாந்தின் அரசனாக முடிசூடினார்.

1541 – இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ லிமாவில் கொல்லப்பட்டார்.

1718 – உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரின் மகன் அலெக்சி பெத்ரோவிச் தந்தையினால் தேசத்துரோகக் குற்றச்சாட்டுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, மர்மமான முறையில் மரணமடைந்தான்.

1723 – பக்கூ நகரம் உருசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: புளூருசு போரில் முதற்தடவையாக வானூர்திகள் போரில் பயன்படுத்தப்பட்டன.

1803 – கண்டிப் போர்கள்: கண்டியில் சரணடைந்த பிரித்தானியப் படையினர் பெருமளவில் கொல்லப்பட்டனர்.[1][2]

1830 – நான்காம் வில்லியம் பிரித்தானியாவின் அரசராக முடிசூடினார்.

1843 – நாஞ்சிங் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்தது. ஒங்கொங் தீவு பிரித்தானியாவின் கட்டுபாட்டுக்குள் வந்தது.

1870 – ஐக்கிய அமெரிக்காவில் கிறித்துமசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.

1886 – ஆன்றி முவாசான் புளோரின் தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.

1924 – ஐக்கிய அமெரிக்காவின் டொமினிக்கன் குடியரசு மீதான ஆக்கிரமிப்பு எட்டு ஆண்டுகளின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1936 – முதலாவது செயல்முறை ரீதியான உலங்கு வானூர்தி பறக்க விடப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் வானூர்திகள் அங்கேரியின் காசா (இன்றைய சிலோவாக்கியாவில்) மீது குண்டுகளை வீசின. அடுத்த நாள் அங்கேரி போரை அறிவித்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சான் மரீனோ மீது பிரித்தானிய வான்படை தவறுதலாகக் குண்டுத்தாக்குதல் நடத்தியதில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

1945 – ஐக்கிய நாடுகள் பட்டயம் சான் பிரான்சிஸ்கோவில் 50 கூட்டு நாடுகளினால் கையெழுத்திடப்பட்டது.

1948 – முதலாவது இருமுனை சந்தி திரான்சிஸ்டருக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷாக்லி பெற்றார்.

1960 – முன்னாள் பிரித்தானிய சோமாலிலாந்து சோமாலிலாந்து என்ற பெயரில் விடுதலை பெற்றது.

1960 – மடகாசுகர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1974 – உலகளாவிய தயாரிப்புக் குறியீடு முதன் முதலாக ரிக்லியின் மெல்லும் பசையின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது.

1976 – கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

1977 – எல்விஸ் பிரெஸ்லி தனது கடைசி இசை நிகழ்ச்சியை இந்தியானாபோலிசில் நடத்தினார்.

1978 – டொரான்டோ சென்ற ஏர் கனடா 189 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.

1991 – யுகொசுலாவிய மக்கள் இராணுவம் சுலோவீனியா மீது 10-நாள் போரைத் தொடங்கியது.

1995 – கத்தாரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், சேக் அமத் பின் கலீபா அல் தானி அவரது தந்தை கலீபா பின் அமது அல் தானியை கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தார்.

1995 – அடிஸ் அபாபாவில் எகிப்திய அரசுத்தலைவர் ஓசுனி முபாரக் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

2000 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை பாத்திமாவின் மூன்றாவது இரகசியத்தை அறிவித்தார்.

2007 – திருத்தந்தை தேர்தலில் வெற்றி பெறுபவர் மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற வேண்டும் என திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் திருத்தம் கொண்டுவந்தார்.

2012 – கொலராடோவில் பரவிய தீயினால் 347 வீடுகள் எரிந்து சாம்பலாயின, இருவர் உயிரிழந்தனர்.

2013 – சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் இடம்பெற்ற கலவரங்களில் 36 பேர் உயிரிழந்தனர்.

2015 – ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அரசமைப்பின் 14வது திருத்தத்தின் படி ஒரு-பால் இணையரின் திருமணம் புரிவதற்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.