• Fri. Jul 26th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 20

Mar 20, 2022

மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டின் 79 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 80 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.

1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.

1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.

1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.

1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1861 – மேற்கு அர்கெந்தீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.

1864 – இலங்கையின் பிரபலமான கொள்ளைக்காரன் உத்துவான்கந்தை சூர சார்டீல் என்பவன் கேகாலை, மாவனெல்லையில் கைது செய்யப்பட்டான். பின்னர் 1964 மே 7 இல் தூக்கிலிடப்பட்டான்.

1890 – செருமனியின் பிரதமர் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் பேரரசர் இரண்டாம் வில்லியமால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

1913 – சீனத் தேசியக் கட்சியின் நிறுவனத் தலைவர் சுங் சியாவோ-சென் கொலை முயற்சியில் காயமடைந்தார். இவர் இரண்டாம் நாள் உயிரிழந்தார்.

1915 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது பொதுச் சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

1922 – ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் லாங்லி சேவைக்கு விடப்பட்டது.

1933 – டேச்சு அரசியல் கைதிகள் முகாமை அமைப்பதற்கான கட்டளையை ரெய்க்ஸ் பியூரர் எஸ் எஸ் ஐன்றிச் இம்லர் விடுத்தார்.

1934 – சப்பானில் ஆக்கோடேட் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீ 4,170 சதுர கிலோ மீட்டர் நகரை அழித்தது, 2,165 பேர் உயிரிழந்தனர்.

1942 – போலந்தில் நாட்சி செருமனியரினால் கட்டாய வேலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 100 போலந்து நாட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1942 – மேற்கு உக்ரேனில் ரொகார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் செருமனியப் படைகளால் கொல்லப்பட்டனர்.

1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.

1972 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் முதற்தடவையாக ஐரியக் குடியரசுப் படை கார்க் குண்டுத் தாக்குதலை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டனர், 148 பேர் காயமடைந்தனர்.

1987 – அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எயிட்சுக்கு எதிரான சிடோவிடின் என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது.

1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் அஃபபெட் நகரைக் கைப்பற்றினர்.

1990 – பெர்டினண்ட் மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோஸ், கையூட்டு, கையாடல், ஊழல் போன்ற குற்றங்களுக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

1993 – இங்கிலாந்து, வெரிங்டன் நகரில் ஐரியக் குடியரசுப் படையின் குண்டுத்தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

1995 – டோக்கியோவில் சுரங்கப் பாதை ஒன்றில் ஓம் சின்ரிக்கியோ என்ற மதக் கும்பல் நடத்திய நச்சு வாயுத் தாக்குதல் ஒன்றில் 13 பேர் கொல்லப்பட்டு 1,300 பேர் காயமடைந்தனர்.

2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2006 – கிழக்கு சாடில் 150 சாட் இராணுவத்தினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.

2012 – ஈராக்கின் 10 நகரங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 52 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2015 – வலய மறைப்பு, சம இரவு நாள், பெருமுழுநிலவு அனைத்தும் ஒரே நாளில் நிகழ்ந்தன.