• Fri. Mar 29th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 23

Mar 23, 2022

மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1540 – வால்த்தம் அபே திருச்சபை இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரிடம் சரணடைந்தது.

1568 – சமயத்துக்கான பிரெஞ்சுப் போர்களின் இரண்டாம் கட்டம் முடிவுக்கு வந்தது.

1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் புனித மைக்கேல் அரண்மனையில் அவரது படுக்கையறையில் வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

1816 – அமெரிக்க மதப் பரப்புனர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.

1821 – விடுதலைக்கான கிரேக்கப் போரில் கலமட்டா நகரம் வீழ்ந்தது.

1848 – நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர்.

1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.

1879 – பசிபிக் போர்: சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் இடையே முதலாவது போர் நடைபெற்ரது.

1885 – சீன-பிரெஞ்சுப் போர்: வடக்கு வியட்நாம், உங் கோவா நகரில் நடந்த சமரில் சீனா வெற்றி பெற்றது.

1889 – மிர்சா குலாம் அகமது அகமதியா என்ற முசுலிம் சமூகத்தை இந்தியாவில் அமைத்தார்.

1901 – முதலாவது பிலிப்பீன் குடியரசின் அரசுத்தலைவர் எமிலியோ அகுயினால்டோ இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

1918 – முதலாம் உலகப் போர்: செருமனியின் மூன்றாம் நாள் தாக்குதலில், பிரித்தானியாவின் 10-வது அரச மேற்கு கெண்ட் இராணுவப் பிரிவில் பெரும்பாலானோர் போர்க் கைதிகலாகப் பிடிபட்டனர்.

1919 – இத்தாலியின் மிலன் நகரில் பெனிட்டோ முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.

1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத் சிங், சிவராம் ராஜகுரு, சுக்தேவ் தபார் ஆகியோர் காவல்துறை அதிகாரி ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

1933 – இட்லர் செருமனியின் சர்வாதிகாரியானது நாடாளுமன்றத்தினால் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1939 – அங்கேரிய வான் படைகள் சிலோவாக் வான் படையினரைத் தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். சிலோவாக்-அங்கேரியப் போர் ஆரம்பமானது.

1940 – அகில இந்திய முசுலிம் லீக்கின் மாநாட்டில் இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கை வெளியிடப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை சப்பானியர் கைப்பற்றினர்.

1956 – பாக்கித்தான் உலகின் முதலாவது இசுலாமியக் குடியரசாகியது.

1965 – நாசாவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.

1966 – தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.

1978 – லெபனானில் ஐநா அமைதி காக்கும் படையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகியது.

1980 – எல் சால்வடோர் பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சல்வடோர் இராணுவத்தினர் பொதுமக்களைக் கொல்லுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.

1991 – சியேரா லியோனியில் 11-ஆண்டு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1994 – ஐக்கிய அமெரிக்க வான்படையின் எப்-16 வானூர்தி சி-130 வானூர்தியுடன் மோதி தரையில் வீழ்ந்ததில், தரையில் 24 அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

1994 – சைபீரியாவில் உருசியாவின் ஏரோபுலொட் 593 விமானம் வீழ்ந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

1996 – சீனக் குடியரசில் அரசுத்தலைவருக்கான முதலாவது நேரடித் தேர்தல் இடம்பெற்றது. லீ டெங்-உய் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998 – டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

1999 – பரகுவையின் துணை அரசுத்தலைவர் லூயிசு மரியா அகானா கொல்லப்பட்டார்.

2001 – உருசியாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.

2008 – இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஐதராபாதில் திறக்கப்பட்டது.

2018 – பெருவின் அரசுத்தலைவர் பெத்ரோ குக்சீன்சுக்கி பதவியில் இருந்து விலகினார்.

2019 – நான்கு ஆண்டுகள் சண்டையின் பின்னர், அமெரிக்க-ஆதரவு “சிரிய சனநாயகப் படைகள்” இசுலாமிய அரசு மீதான வெற்றியை அறிவித்தது.