• Fri. Jul 26th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 28

Mar 28, 2022

மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில் விற்றனர்.

364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார்.

1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.

1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது.

1801 – புளோரன்சு உடன்பாடு: முதல் பிரெஞ்சுக் குடியரசுக்கும் நேப்பிள்சு இராச்சியத்துக்கும் இடையே போர் முடிவுக்கு வந்தது.

1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.

1809 – மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்சு எசுப்பானியாவை வென்றது.

1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வால்பரைசோ சமரில் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

1854 – கிரிமியப் போர்: பிரான்சும் பிரித்தானியாவும் உருசியா மீது போரை அறிவித்தன.

1879 – ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஊலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.

1910 – கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.

1930 – கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.

1933 – இம்பீரியல் ஏர்வேய்சு வானூர்தியில் பயணி ஒருவர் தீ மூட்டியதால் விமானம் விபத்துக்குள்ளாகியதில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.

1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: மூன்று-நாள் முற்றுகையை அடுத்து மத்ரித் நகரை தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ கைப்பற்றினார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் நடுநிலக்கடற்படை இத்தாலியின் ஐந்து போர்க்கப்பல்களைத் தாக்கி அழித்தது.

1942 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் கூட்டுப் படை சென் நசேரில் செருமானியப் போர்க்கப்பல் டிர்பிட்சை விரட்டுவதற்கு திடீர்த் தாக்குதலை நடத்தியது.

1946 – பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது.

1951 – முதலாம் இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியப் படைகள் வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகளை மாவோ கே சமரில் தோற்கடித்தது.

1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.

1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.

1979 – பிரித்தானிய மக்களவையில் யேம்சு கலகனின் அமைச்சரவை மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வாக்கால் வெற்றியடைந்தது.

1979 – ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுக்கரு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டது.

1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

1994 – தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

1999 – கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர்.

2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.