• Thu. Mar 28th, 2024

வரலாற்றில் இன்று மார்ச் 5

Mar 5, 2022

மார்ச் 5 கிரிகோரியன் ஆண்டின் 64 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 65 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 301 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

363 – உரோமைப் பேரரசர் யூலியன் அந்தியோக்கியாவில் இருந்து 90,000 படையினருடன் சாசானியரைத் தாக்கப் புறப்பட்டான். இப்போரில் யூலியன் இறந்தான்.

1496 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி அறியப்படாத நிலங்களைக் கண்டறிவதற்கான உரிமையை ஜான் கபோட்டுக்கும் அவரது மகன்களுக்கும் வழங்கினார்.

1616 – 73 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட நிக்கோலாசு கோப்பர்னிக்கசின் பரலோகக் கோளங்களின் சுழற்சி என்ற நூல் தடைசெய்யப்பட்ட ஆவணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் அறிவிக்கப்பட்டது.

1770 – பாஸ்டன் படுகொலை: பாஸ்டனில் அமெரிக்கர்களுக்கும் பிரித்தானியப் படையினருக்கும் இடையில் கிளம்பிய கலவரத்தை அடுத்து ஐந்து அமெரிக்கர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவே அமெரிக்கப் புரட்சிப் போர் வெடிக்கக் காரணமானது.

1793 – பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.

1824 – முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியா அதிகாரபூர்வமாக பர்மா மீது போர் தொடுத்தது.

1836 – சாமுவேல் கோல்ட் 34-கேலிபர் சுழல் கைத்துப்பாக்கிக்கான காப்புரிமம் பெற்றார்.

1857 – கொழும்பு கோட்டையில் தற்போதும் இயங்கும் மணிக்கூட்டுக் கோபுரம் (பழைய கலங்கரை விளக்கம்) கட்டி முடிக்கப்பட்டது.

1906 – மோரோ கிளர்ச்சி: அமெரிக்க இராணுவம் பழங்குடி மோரோ மகளின் கிளர்ச்சியை அடக்க பெருமளவு படையினரை புட் டாஜோ பகுதியில் குவித்தது. இத்தாக்குதல்களில் ஆறு பழங்குடியினர் மட்டுமே உயிர் தப்பினர்.

1912 – இத்தாலிய-துருக்கியப் போர்: இத்தாலியப் படையினரே முதன் முதலாக வான்கப்பல்களை படைத்துறைத் தேவைக்காகப் பயன்படுத்தினர்.

1931 – பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு: காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1933 – பெரும் பொருளியல் வீழ்ச்சி: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் வங்கி விடுமுறையை அறிவித்து, அனைத்து வங்கிகளையும் மூடி, அவற்றின் நிதிப் பரிமாற்றங்களைத் தடை செய்தார்.

1933 – செருமானியத் தேர்தலில் இட்லரின் நாட்சி கட்சி 43.9% வாக்குகளைப் பெற்றது.

1940 – காத்தின் படுகொலைகள்: யோசப் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் உயர்பீடம் 14,700 போலந்து போர்க்கைதிகள் உட்பட 25,700 போலந்து மக்களுக்கு மரணதண்டனை அளித்து கையொப்பமிட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் இடச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளின் தலைநகரான பத்தேவியாவைக் கைப்பற்றினர்.

1946 – பனிப்போர்: வின்ஸ்டன் சர்ச்சில் மிசூரியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது “இரும்புத் திரை” என்ற பதத்தைப் பயன்படுத்தினார்.

1953 – சோவியத் ஒன்றியத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மாஸ்கோவில் மூளை இரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்தார்.

1960 – இந்தோனேசிய அரசுத்தலைவர் சுகர்ணோ 1955 ஆ ஆண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து, தானே தேர்ந்தெடுத்த உறுப்பினர்களைக் கொண்ட புதிய நாடாளுமன்றத்தை அறிவித்தார்.

1964 – இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது.

1965 – பகுரைனில் பிரித்தானியக் குடியேற்றவாதிகளுக்கு எதிரான இடதுசாரிக் கிளர்ச்சி இடம்பெற்றது.

1970 – அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் 43 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்தது.

1974 – யோம் கிப்பூர்ப் போர்: இசுரேலியப் படையினர் [[சுயஸ் கால்வாய்|சூயசு கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து பின்வாங்கினர்.

1979 – சோவியத் விண்கலங்கள் வெனேரா 11, வெனேரா 12, மற்றும் செருமனிய-அமெரிக்க விண்கலம் ஈலியோசு II ஆகியவற்றை காமா கதிர் வெடிப்பு தாக்கியது.

1981 – ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.

1982 – சோவியத்தின் வெனேரா 14 விண்கலம் வெள்ளிக் கோளில் தரையிறங்கியது.

1998 – இலங்கை தலைநகர் கொழும்பில் மருதானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பேருந்துக் குண்டுத் தாக்குதலில் 40 பேர் வரை கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2003 – கைஃபா நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 17 இசுரேலியப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார்.

2012 – மடகாசுகரை இரீனா என்ற வெப்பவலயச் சூறாவளி தாக்கியதில் 75 பேர் உயிரிழந்தனர்.