• Fri. Jul 26th, 2024

வரலாற்றில் இன்று நவம்பர் 29

Nov 29, 2021

நவம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 334 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 32 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1394 – கொரிய மன்னர் யி சொங்-கை தலைநகரை கேசாங்கில் இருந்து அன்யாங்கிற்கு (இன்றைய சியோல்) மாற்றினார்.

1549 – திருத்தந்தைத் தேர்தல் (1549–50) ஆரம்பமானது.

1612 – சுவாலி என்ற இடத்தில் (இன்றைய குசராத்து மாநிலத்தில்) போர்த்துக்கீசருக்கும் கிழக்கிந்திய நிறுவன படைகளுக்குமிடையே இடம்பெற்ற போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1729 – நாட்செசு பழங்குடியினர் மிசிசிப்பியில் பிரெஞ்சுக் குடியேறிகளான 138 ஆண்கள், 35 பெண்கள், 56 குழந்தைகளைப் படுகொலை செய்தனர்.

1732 – தெற்கு இத்தாலி, நாபொலியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,940 பேர் உயிரிழந்தனர்.

1781 – அடிமைகளை ஏற்றிச்சென்ற சொங் என்ற பிரித்தானியக் கப்பல் மாலுமிகள் காப்பீடு பெறுவதற்காக 133 ஆப்பிரிக்கர்களைக் கொன்று கடலுக்குள் எறிந்தனர்.

1783 – அமெரிக்காவின் நியூ செர்சி மாநிலத்தில் 5.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

1807 – நெப்போலியப் படைகள் போர்த்துகலுக்கு முன்னேறியதை அடுத்து ஆறாம் யோவான் மன்னர் லிஸ்பனில் இருந்து அரச குடும்பத்தினருடன் வெளியேறி பிரேசிலுக்கு சென்றார்.

1830 – போலந்தில் உருசியாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.

1847 – வாசிங்டனில் மதப்பரப்புனர் மார்க்கசு விட்மன், அவரது மனைவி மற்றும் 15 பேர் அமெரிக்கப் பழங்குடிகளினால் கொல்லப்பட்டனர்.

1850 – புருசியா ஆத்திரியாவின் தலைமையில் செருமன் கூட்டமைப்பில் சேர சம்மதித்தது.

1855 – துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.

1877 – தாமசு ஆல்வா எடிசன் போனோகிராப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.

1890 – சப்பானில் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.

1899 – பார்சிலோனா கால்பந்துக் கழகம் அமைக்கப்பட்டது.

1915 – கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன.

1922 – ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.

1929 – அமெரிக்கர் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா விடுவிக்கப்பட்டது.

1945 – யுகோசுலாவிய கூட்டு மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.

1947 – முதலாம் இந்தோ-சீனப் போர்: வியட்நாமில் மீ டிராக் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகளடங்கிய 300 பேரைப் படுகொலை செய்தன.

1947 – பாலத்தீனத்தைப் பிரிப்பதென ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முடிவெடுத்தது.

1950 – வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.

1961 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது.

1963 – கனடிய விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியதில் 118 பேர் உயிரிழந்தனர்.

1982 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சோவியத் படைகளை ஆப்கானித்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.

1986 – சுரிநாம் இராணுவம் மொய்வானா கிராமத்தைத் தாக்கி 39 பொதுமக்களைக் கொன்றது.

1987 – தென் கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 115 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாக்கித்தான் வெற்றிகரமாக நடத்தியது.