• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 12

Oct 12, 2021

அக்டோபர் 12 கிரிகோரியன் ஆண்டின் 285 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 286 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 80 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 539 – பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது.

1492 – கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார்.

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

1748 – பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன.

1785 – ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார்.

1792 – கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது.

1798 – பிளம்மிய, லக்சம்பர்க் விவசாயிகள் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1798 – இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]

1822 – முதலாம் பேதுரு பிரேசில் பேரரசராக முடிசூடினார்.

1823 – சார்லசு மேகிண்டோச் தான் தயாரித்த முதலாவது மழையங்கியை விற்பனைக்கு விட்டார்.

1871 – பிரித்தானிய இந்தியா குற்றப் பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 160 இற்கும் மேற்பட்ட உள்ளூர் குழுக்கள் ‘குற்ற சமூகங்களாக’ அறிவிக்கப்பட்டன. 1949 இல் இச்சட்டம் விலக்கப்பட்டது.

1901 – அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் “செயலாட்சி மாளிகை” என்ற பெயரை வெள்ளை மாளிகை என அதிகாரபூர்வமாக மாற்றினார்.

1915 – முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் செருமனியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1918 – மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஏதென்சு நகரம் அச்சு நாடுகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

1960 – சப்பான் சோசலிசக் கட்சித் தலைவர் இனசீரோ அசனூமா குத்திப் படுகொலை செய்யப்பட்டமை நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.

1963 – சோவியத் ஒன்றியத்தில் 23 ஆண்டுகளாக சிறை வக்கப்பட்டிருந்த இயேசு சபை மதப்பரப்புனர் வால்டர் சிசெக் விடுதலை செய்யப்பட்டார்.

1964 – சோவியத் ஒன்றியம் வசுகோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது விண்கலமும், விண் உடைகள் இல்லாமல் விண்ணுக்குச் சென்ற முதலாவது விண்கலமும் ஆகும்..

1968 – எக்குவட்டோரியல் கினி எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1970 – வியட்நாம் போர்: கிறித்துமசுக்கு முன்னதாக 40,000 அமெரிக்கப் படையினர் வெளியேறவிருப்பதாக அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.

1971 – பாரசீகப் பேரரசின் 2,500 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

1976 – மும்பையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171 மும்பை வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும்போது வெடித்ததில், திரைப்பட நடிகை ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.

1984 – ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுவெடிப்பில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டனர், 31 பேர் காயமடைந்தனர்.

1986 – மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.

1986 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன், இளவரசர் பிலிப் ஆகியோர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டனர்

1992 – எகிப்தில் கெய்ரோ நகரில் 5.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 510 பேர் உயிரிழந்தனர்.

1993 – இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.

1994 – மெகல்லன் விண்ணுளவி வெள்ளியின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.

1999 – முன்னாள் சோவியத் தன்னாட்சிக் குடியரசு அப்காசியா சியார்சியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1999 – பாகித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பெர்வேசு முசாரப் நவாசு செரீபை ஆட்சியில் இருந்து அகற்றி அரசுத்தலைவரானார்.

1999 – உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.

2000 – ஏடனில் அமெரிக்காவின் கோல் கப்பல் இரண்டு தற்கொலைக் குண்டுகளால் சேதமடைந்தது. 17 மாலுமிகள் கொல்லப்பட்டனர், 39 பேர் உயிரிழந்தனர்.

2001 – அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

2002 – பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.

2003 – பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.

2005 – சீனாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பறப்பு விண்கலம் சென்சூ 6 இரண்டு வீரர்களுடன் ஏவப்பட்டது.

2017 – யுனெசுக்கோவில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தது.[2] தொடர்ந்து இசுரேலும் வெளியேறியது.