• Sun. Sep 15th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 21

Oct 21, 2021

அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.

1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.

1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.

1824 – யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.

1833 – இலங்கையில் புதிய மீயுயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.

1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் “எட்வேர்ட் பேக்கர்” கொல்லப்பட்டார்.

1876 – யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.

1892 – உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

1895 – சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.

1931 – சப்பானியப் பேரரசின் இராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற இரகசியக் குழு இராணுவப் புரட்சியை நிகழ்த்தித் தோல்வி கண்டது.

1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் கலினின்கிராதில் செருமனியக் குடிமக்கள் பலர் செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை: செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானப் படையினரின் முதலாவது கமிக்காசு தற்கொலைத் தாக்குதல் ஆத்திரேலியா கப்பல் மீது நடத்தப்பட்டது.

1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1956 – கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.

1959 – வெர்னர் வான் பிரவுன் உடபப் பல செருமனிய அறிவியலாளர்களை அமெரிக்க இராணுவத்தில் இருந்து நாசாவுக்குப் பணி மாற்றம் செய்யும் உத்தரவை அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் பிறப்பித்தார்.

1966 – வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்..

1969 – சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார்.

1971 – இசுக்காட்ஃப்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.

1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.

1987 – யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1994 – சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.