• Sat. Jul 27th, 2024

வரலாற்றில் இன்று அக்டோபர் 25

Oct 25, 2021

அக்டோபர் 25 கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 299 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார்.

1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.

1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர்.

1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர்.

1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த இரண்டாவது ஐரோப்பியர் என்ற பெயரை டச்சு கப்டன் டேர்க் ஆர்ட்டொக் பெற்றார். மேற்கு அவுஸ்திரேலியாவில் டேர்க் ஆர்ட்டொக் தீவு அவரது பெயரால் அழைக்கப்படுகிறது.

1760 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடிசூடினார்.

1900 – ஐக்கிய இராச்சியம் திரான்சுவால் குடியேற்றத்தை (இன்றைய தென்னாப்பிரிக்காவில்) இணைத்துக்கொண்டது.

1917 – உருசியாவில் அக்டோபர் புரட்சி (பழைய யூலியன் நாட்காட்டியின் படி), இடம்பெற்றது. போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.

1918 – அலாஸ்காவில் பிரின்சஸ் சோஃபியா என்ற கப்பல் மூழ்கியதில் 353 பேர் உயிரிழந்தனர்.

1920 – இங்கிலாந்தின் பிரிக்சுடன் சிறையில் 74 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சின் பெயின் கோர்க் பிரபு டெரன்சு மெக்சுவீனி இறந்தார்.

1924 – இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

1927 – இத்தாலியப் பயணிகள் கப்பல் பிரின்சிபெசா மபால்டா பிரேசிலில் மூழ்கியதில் 314 பேர் உயிரிழந்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் டாங் என்ற நீர்மூழ்கிக் கப்பல் கப்பலில் இருந்த நீர்மூழ்கிக் குண்டு வெடித்ததில் மூழ்கியது.

1944 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் வரலாற்றில் பெரும் கடற்சமர் இடம்பெற்றது.

1945 – சப்பான் கூட்டு நாடுகளிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து சீனக் குடியரசு தாய்வானை இணைத்துக் கொண்டது.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் ஏவுகணைகள் கியூபாவில் உள்ளதைக் காட்டும் புகைப்படங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டன.

1971 – ஐநாவிலிருந்து சீனக் குடியரசு வெளியேற்றப்பட்டு மக்கள் சீனக் குடியரசு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1973 – இசுரேல்-எகிப்து இடையிலான யோம் கிப்பூர்ப் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

1983 – கிரெனடா பிரதமரும் அவரது ஆதரவாளர்கள் பலரும் இராணுவப் புரட்சியை அடுத்துத் தூக்கிலிடப்பட்ட ஆறாவது நாள் ஐக்கிய அமெரிக்காவும் அதன் கரிபியன் கூட்டு நாடுகளும் கிரெனாடாவை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றின.

1995 – அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் தொடருந்து ஒன்று மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்றுடன் மோதியதில் ஏழு மாணவர்கள் உயிரிழந்தனர்.

1995 – கொழும்பு கொலன்னாவை எண்ணெய்க் குதங்களில் இடம்பெற்ற பெரும் தீயில் 21 படையினர் கொல்லப்பட்டனர்.

1997 – உள்நாட்டுப் போரை அடுத்து அரசுத்தலைவர் பாசுக்கால் லிசூபா பிராசவில்லி நகரை விட்டு வெளியேறியதை அடுத்து டெனிசு இங்குவேசோ காங்கோ குடியரசின் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.

2000 – பிந்துனுவேவா படுகொலைகள்: இலங்கையில் பண்டாரவளை, பிந்துனுவேவா சிறைகள் மீது சிங்களவர்கள் நடத்திய தாக்குதலில் தமிழ் அரசியல் கைதிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.

2001 – இந்தியாவில் தடா சட்டத்துக்கு பதிலாக போட்டோ என்ற புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 23 தீவிரவாத அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது.

2007 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதலாவது இரட்டை அடுக்கு விமானம் ஏர்பஸ் ஏ380 தனது முதலாவது சேவையை சிட்னிக்கு ஆரம்பிக்கிறது.

2009 – பகுதாது நகரில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 155 பேர் கொல்லப்பட்டனர்.

2017 – சீனப் பொதுவுடமைக் கட்சியின் 19-வது தேசியப் பேராயத்தில் சீ சின்பிங் இரண்டாவது தடவையாக கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.